கம்யூனிஸ்டு தலைவர் சீதாராம் யெச்சூரி, திரிபுரா (மேற்கு) மக்களவை தொகுதியில் உள்ள 1679 வாக்குச்சாவடிகளில் 460 வாக்குச்சாவடிகளில் அத்துமீறி கள்ள ஓட்டுகள் பதிவாகியுள்ளதாகக் கூறினார்.
திரிபுராவில் ஆளும் பாஜகவினர் அத்துமீறலால் 168 தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வடமேற்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் முதல்வர் பிப்லாப் தேப் தலைமையிலான பாஜக அரசு உள்ளது. அந்த மாநிலத்தில் திரிபுரா (மேற்கு) தொகுதிக்கான மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவின் போது வரலாறு காணாத அளவுக்கு 81% வாக்குகள் பதிவாகின.
ஆனால், வாக்குச்சாவடிகளில் அம்மாநில ஆளும் கட்சியான பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து, கள்ள ஓட்டுகளைப் போட்டதாக புகார் எழுந்தது.
கம்யூனிஸ்டு தலைவர் சீதாராம் யெச்சூரி, திரிபுரா (மேற்கு) மக்களவை தொகுதியில் உள்ள 1679 வாக்குச்சாவடிகளில் 460 வாக்குச்சாவடிகளில் அத்துமீறி கள்ள ஓட்டுகள் பதிவாகியுள்ளதாகக் கூறினார்.