இதை சாப்பிட்டால் ஒருவாரம் ஆனாலும் பசிக்குது

இதை சாப்பிட்டால் ஒருவாரம் ஆனாலும் பசிக்குது

பெரும்பாலோனோர் இந்த நாயுருவி செடியை பார்த்திருக்க வாய்ப்பில்லை ஆனால் இது கிராமப்புறங்களிலும் புதர்களிலும் அதிகம் காணப்படும் மிகவும் மூலிகைத் தன்மை வாய்ந்த தாவரமாகும்.

இதில் இரண்டு வகை உண்டு ஒன்று பச்சை நிறம் நாயுருவி இன்னொன்று செந்நிற நாயுருவி இந்த செந்நிற நாயுருவிக்கு மரணத்தை போக்கும் சக்தி உண்டு.அதைப்பற்றி நாம் மற்றொரு பதிவில் காணலாம்.

இந்தப் பச்சை நிறம் கொண்ட நாயுருவிகும் பல மூலிகை தன்மைகள் உண்டு அதைப்பற்றி இப்பதிவில் காணலாம்.

• நாயுருவி வேரை சுத்தம் செய்து காய வைத்து அரைத்து பொடியாக்கி தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பல் உறுதி பெறும்.முகம் பொலிவடையும். மனக் கோளாறு நீங்கும்.தூக்கமின்மை பிரச்சனை சரி செய்யும். நரம்புத்தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்களுக்கு இது அருமருந்தாக பயன்படுகிறது.
• நாயுருவி அரிசிக்கு பசியைப் போக்கும் சக்தி உண்டு அதாவது இதன் அரிசியை சமைத்து உண்டு வந்தால் ஒரு வாரம் ஆனாலும் பசி எடுக்காது.
• விட்டு விட்டு வரும் காய்ச்சலுக்கு இதன் இலையுடன் மிளகு ,பூண்டு சேர்த்து அரைத்து மாத்திரையாக உருட்டி காயவைத்து காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுத்துவர காய்ச்சல் குணமாகும்.
• நாயுருவி இலையை சுத்தம் செய்து பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர நுரையீரலிலுள்ள சளி மற்றும் இருமல் குணமாகும்.
• நாயுருவி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எருமை மாட்டு பால் தயிரில் கலந்து காலை மாலை என இருவேளை உண்டு வர சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு மற்றும் பேதி குணமாகும்
• நாய் கடி பாம்புக்கடி போன்ற விஷக்கடிகளுக்கு நாயுருவி இலையில் 30 மில்லி அளவிற்கு சாறுபிழிந்து கொடுத்துவர விஷம் முறியும் ஏழு நாட்களுக்கு உப்பில்லா பத்தியம் இருக்க வேண்டும்.
• கதிர் விடாத இலையைப் பறித்து இந்தச் சாற்றில் சம அளவு தண்ணீர் கலந்து சிறுநீரக பிரச்சனை தீரும்.
• நாயுருவி சாற்றை பிழிந்து இரண்டு சொட்டு காதில் ஊற்ற காதில் சீழ் வடிதல் குணமாகும்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்