சென்னை:
சென்னையில் நடந்த மருத்தவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
சென்னையில் மருத்துவக்கல்லூரியில் பட்டமேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு, தகுதிக்கேற்ற சம்பளம் வழங்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவர்களின் போராட்டம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.