சென்னை:
வரும் 20ம் தேதி இந்தி திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக உயர்நிலைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுகவின் உயர்நிலை செயல் திட்ட குழுக்கூட்டம் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் துரைமுருகன், கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் செப்டம்பர் 20ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.