சென்னை:
‘பட்டாஸ்’ படத்திற்கு போதிய வசூல் ஆகததால், தயாரிப்பாளர்களிடம் நஷ்டஈடு கேட்க விநியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘அசுரன்’ படம் வெற்றியடைந்ததால், ‘பட்டாஸ்’ படத்தையும் நம்பி விநியோகஸ்தர்கள் வாங்கியதாகவும், ஆனால், போதுமான வசூல் ஆகததால், நஷ்ட ஈட்டுத்தொகையை தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்கலாமா என விநியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனே தனுஷ் நடித்த ‘தொடரி’ படத்திற்கான நஷ்டத்தை இப்படித்தான் கேட்டுப் பெற்றார்களாம். அதுபோல், ‘பட்டாஸ்’ நஷ்டத்தையும் கேட்கலாமா என விரைவில் முடிவு செய்யவுள்ளார்களாம்.