ஒடிசா:
ஒடிசா மாநிலத்தில் விருந்து உணவில் பாம்பு ஒன்று இறந்து கிடந்ததால், 50 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம், கேந்திரபாதா மாவட்டத்தில் உள்ள புட்டமுண்டாய் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட தவுலி கிராமத்தில் விருந்து உபசரிப்பு நடைபெற்றது. அந்த விருந்தில் சுமார் 50 பேர் கலந்துகொண்டனர். இந்த விருந்து சாப்பிட்ட சுமார் 50 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த விருந்து முடிந்து கை கழுவும்போது, சமைத்த பாத்திரத்தில் பாம்பு இறந்து கிடந்ததாகவும், புட்டமுண்டாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் வேகமாக குணமடைந்து வருவத £கவும், அவர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள் என அவர் தெரிவித்தார்.