ரூ.21 லட்சம் மோசடி; அசாருதீன் மீது வழக்கு

  • In Sports
  • January 23, 2020
  • 192 Views
ரூ.21 லட்சம் மோசடி; அசாருதீன் மீது வழக்கு

மும்பை:

டிராவல் ஏஜென்டிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்ததாக அசாருதீன் உள்ளிட்ட 3 பேர் மீது மகாராஷ்டிரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத்தை சேர்ந்த டேனிஸ் டூர்ஸ் அண்டு டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சகாப் ஒய் முகமது என்பவர் அம்மாநில போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கடந்த நவம்பர் மாதம் சுதீஷ் அவிக்கல் என்பவர் தனக்காகவும், அசாருதீன், அவரது உதவியாளர் முஜிப்கான் ஆகியோருக்காகவும் துபாய், பாரீஸ் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தார்.

இதற்கான தொகையை ரூ.21,45,000 தராமல் அவர் மோசடி செய்து விட்டதாக டேனிஸ் டூர்ஸ் அண்டு டிராவல்ஸ் உரிமையாளர் சகாப் ஒய் முகமது புகார் அளித்துள்ளார். இதன்பேரில் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து மகாராஷ்டிர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்