ஓடும்போதே தீப்பிடித்து எரிந்த கார்

ஓடும்போதே தீப்பிடித்து எரிந்த கார்

மதுரை:

மதுரையில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததும், அதிலிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் சாருலதா தம்பதி. இவர்கள் தங்களது மாருதி ஆம்னி வேனில் திருப்பரங்குன்றத்தில் உள்ள உறவினரைக் காணச் சென்றுகொண்டிருந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூத்தியார் குண்டு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

உடனடியாக காரில் இருந்த அந்த தம்பதியினர் இறங்கி ஓடவே அதிர்ஷ்டவசமாக தப்பினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்