கனடா:
கனாடாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் பைபர் பிஏ32 ரக விமானம், கனடாவின் டொராண்டோவில் உள்ள புட்டான்வில்லே விமான நிலையத்திலிருந்து, கியூபெக் விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றது.
அந்த விமான நிலையத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.