சென்னை:
சென்னையில் மாணவர்கள் நடத்திய தடையை மீறிய பஸ் தினக்கொண்டத்தின்போது பேருந்தின் கூரையில் ஏறிய மாணவர்கள் மளமளவென சரிந்து விழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஷெனாய் நகர் இருந்து புறப்பட்ட மாநகரப் பேருந்தில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தின் கூரையில் பயணம் செய்து பஸ் தினக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென பேருந்தின் கூரையிலிருந்து சாலையிலேயே மளமளவென சரிந்து விழுந்தனர். தடையை மீறி பஸ் தினத்தை கொண்டாடி மாணவர்கள் இதுவரை 13 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.