புதரில் பச்சிளம் குழந்தை பாதி உடல்

புதரில் பச்சிளம் குழந்தை பாதி உடல்

ஒசூர்:

ஒசூரில் பிறந்து இரண்டு நாட்களேயான பச்சிளம் குழந்தையின் பாதி உடல் புதரில் கண்டெடுக்கப்பட்டாதல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, ரிங்ரோடு மத்தம் அக்ரகாரம் பகுதியில் புதர் ஒன்றில் பச்சிளம் குழந்தையின் உடல் கிடப்பதாக மத்திகிரி போலிசாருக்கு அப்பகுதி பொது மக்கள் தகவல் அளித்துள்ளனர்.

போலிசார் விரைந்து சென்று பார்த்தபோது பிறந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆன நிலையில், நாய் கடித்து குதறி பாதி உடலுடன் பச்சிளம் குழந்தை இருந்ததை உறுதி செய்தனர்.

பச்சிளம் குழந்தையின் மேல்பாதி உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மத்திகிரி போலிசார்

குழந்தை ஆணா,பெண்ணா என தெரியாத நிலையில் பெண் குழந்தையாக இருந்து குப்பையில் வீசப்பட்டு நாய் இழுத்து சென்றதா அல்லது இறந்த குழந்தையின் உடல் புதைக்கப்படமால் சாலையோரம் போட்டு சென்றனரா? என்கிற கோணத்தில் மத்திகிரி போலிசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்