சென்னை:
கடந்த 2017ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’ தொலைக்காட்சி, போன், நியூஸ் பேப்பர் என எந்த ஒரு வெளியுலகத் தொடர்பே இல்லாமல் 100 நாட்கள் வீட்டுக்குள் இருப்பதும், பல போட்டிகளை வீட்டுக்குள் நடத்துவதும் ஆகும்.
இந்த நிகழ்ச்சியை 2 சீசனிலும் நடிகர் கமலஹாசன் நடத்தி வந்தார். 2017ம் ஆண்டில் ஆரவ்வும், 2018ல் ரித்விகாவும் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது மூன்றாவது சீசன் பற்றிய செய்திகள் ரசிகர்களிடையே பரவி வருகின்றன. இம்முறை கமலுக்கு பதிலாக நயன்தாராவும், விஜய் தொலைக்காட்சிக்கு பதிலாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பாகும் என கூறப்பட்டது.
மேலும், பிக் பாஸ் 3யில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் வெளியான நிலையில், பல பேர் மறுத்துள்ளனர். கமலஹாசன் சர்ச்சை பேச்சால் பல்வேறு வழக்குகள் இவர் மீது தொடுத்துள்ள நிலையிலும், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாலும் நடிகை நயன்தாரா தொகுத்து வழங்கலாம் என தகவல் பரவியது.
இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது ‘பிக் பாஸ் 3’யின் 10 விநாடிகள் கொண்ட பிரமோ விஜய் டிவி நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர். இந்த பிரமோ வெளியீட்டின் மூலம் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகியுள்ளது.
#BiggBoss3 Promo_1 ✌
Gets Follow to get latest update #BiggBossTamil3 pic.twitter.com/zjmChQYsDu— BiggBoss3 (@BiggBossTamizh3) May 15, 2019