ஒசூர் அடுத்த பாகலூர் அரசுப்பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கினார்

ஒசூர் அடுத்த பாகலூர் அரசுப்பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கினார்

ஒசூர் அடுத்த பாகலூரில் அரசுப்பள்ளிகளில் மாணவ மாணவியருக்கு மே மாதத்திற்கான அரிசி,பருப்பு வழங்கப்பட்டது.

கொரோனா நடவடிக்கையாக 4 மாதத்திற்கு மேலாக ஊரடங்கு தொடர்வதால் பள்ளி கல்லூரிகள் தொடர்ந்து திறக்க வேண்டாம் என தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது.

இதனால் பள்ளிக்கூடங்களில் சத்துணவு மையம், அங்கன்வாடிகளில் உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதால் வீடுகளில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு மாணவ மாணவியர்களுக்கு நேரடியாக அரிசி பருப்பு உள்ளிட்டவைகளை வழங்க உத்தரவிட்டிருந்தது.

அதன்அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூரில் உள்ள அரசு துவக்கப்பள்ளி, அரசு ஆடவர், மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன

இந்த நிகழ்வில் ஒசூர் ஒன்றியகுழு தலைவர் சசி வெங்கடசாமி, பாகலூர் ஊராட்சி தலைவர் ஜெயராமன், மாவட்ட அதிமுக கவுன்சிலர் ரவிக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்