விருதுநகர்:
விருதுநகரில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவர் வில் வித்தையில் சாதனை படைத்துள்ளார்.
விருதுநகர் தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு பயின்றுவரும் ஷியாம் கணேஷ், வில் வித்தை விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்.
இவர் தரையில் கைகளை ஊன்றி தலைகீழாக நின்றபடி கால்களில் அம்பு எய்யும் வகையில் பயற்சி பெற்றுள்ளார். தற்போது 14 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கினை குறிவைத்து துல்லியமாக அம்பு எய்து ஷியாம் கணேஷ் சாதனை படைத்துள்ளார்.
ஒன்றரை நிமிடத்திலேயே 3 முறை இலக்கை எட்டியதன் மூலம் நோபல் உலக சாதனை புத்தகத்தில் ஷியாம் கணேஷ் இடம்பிடித்துள்ளார்.