சென்னை:
அமமுக ஒரு அழிவு சக்தி என பா.ஜ., தேசிய செயலாளரான எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பா.ஜ., தேசிய செயலாளரான எச்.ராஜா தன்னுடைய டுவிட்டர் பதிவில், 1998 மற்றும் 2004ம் ஆண்டு அஇஅதிமுக பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தது. ஆனால், ஜெயலலிதா திமுகவுடன் என்றாவது கைகோர்த்தாரா?
இன்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் நினைவிற்கு துரோகம் செய்கிறார் தினகரன். எஸ்டிபிஐ-யுடன் கூட்டணி வைத்து பயங்கரவாதத்தை வளர்கிறார். அமமுக ஒரு அழிவு சக்தி என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
1998 மற்றும் 2004 ல் அஇஅதிமுக பாஜக உடன் கூட்டணி வைத்தது. ஆனால் செல்வி ஜெயலலிதா அவர்கள் திமுக வுடன் என்றாவது கைகோர்த்தாரா. இன்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் நினைவிற்கு துரோகம் செய்கிறார் தினகரன். மேலும் SDPI யுடன் கூட்டணி வைத்து பயங்கரவாதத்தை வளர்க்கிறார். அமமுக ஒரு அழிவுசக்தி
— Chowkidar H Raja (@HRajaBJP) May 12, 2019