இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிய அமெரிக்கா.. கொரோனாவை கட்டுபடுத்த 21 கோடி அறிவித்தது

இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிய அமெரிக்கா.. கொரோனாவை கட்டுபடுத்த 21 கோடி அறிவித்தது

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டாலர்கள் நிதி உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு கூடுதல் பொருளாதார நிதியாக 2.9 மில்லியன் டாலர்களை அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் 100 மில்லியன் டாலர்கள் உதவியை ஏற்கெனவே அமெரிக்கா அறிவித்திருந்தது. உலகளாவிய அளவில் தொற்றுநோயின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் 64 நாடுகளுக்கு இந்த நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு கொரோனாவுக்கு எதிராக ஆய்வகங்களை அமைக்கவும், வைரஸ் பாதிப்பை கண்டுபிடிக்கவும், நிகழ்வு தொடர்பான கண்காணிப்பைச் செய்யவும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உதவியாகவும், தயாரிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்தியாவுக்கு 2.9 மில்லியன் டாலர்கள் உதவிதயாக வழங்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்