ஆபாச படம்: சிக்கிய 3 குழுக்கள்

  • In Chennai
  • December 9, 2019
  • 263 Views
ஆபாச படம்: சிக்கிய 3 குழுக்கள்

சென்னை:

தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையத்தில் பரப்பும் 3 குழுக்கள் சிக்கியுள்ளதாக ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்துவந்த 3000 பேர் பட்டியல் தயார்செய்துள்ளதாகவும், இந்த தண்டனைக்குரிய குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது இணையதளத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பரப்பி வரும் 3 குழுக்கள் சிக்கியுள்ளதாகவும், போலீஸ் வலையில் சிக்கியுள்ள 3 குழுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், தண்டனை பெரும் முதல் குற்றவாளிகளாக அவர்கள் கருதப்படுவார்கள்.

தற்போது வரை இணையத்தில் ஆபாச படங்களை பார்த்து வந்த 3000 பேரின் விவரங்களை சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்