சென்னை:
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் கடந்த ஜுன் 30ம் தேதி காணாமல் போனார்.
இதனையடுத்து அவர் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அப்பெண்ணை திருப்பூரில் போலீசார் மீட்டனர்.
இந்நிலையில், பெண்ணை கடத்தியதாக கூறப்படும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் பிரித்வி, பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.
இதனை கேள்விப்பட்ட போலீசார் பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் போலீயான நிறுவனம் நடத்தி வந்ததும், அங்கு பணியாற்றி வந்த பல பெண்களுக்கு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
மேலும், 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சியான தகவலும் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து ராஜேஷ் பிரித்வி அறையில் இருந்த போலீஸ் சீருடை, போலியான ஆதார் அட்டை, கை விலங்கு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
6 பெண்களை திருமணம் செய்த சம்பவம் தற்போது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.