காவலராக பணியாற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

காவலராக பணியாற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக செயல்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மாவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாராட்டு தெரிவித்துள்ளது. 2007ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற வித்திட்டவர் பந்துவீச்சாளர் ஜோகிந்தர் சர்மா. ஹரியானா மாநிலத்தில் காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் அவர், கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை நாயகனாக வலம் வந்த ஜோகிந்தர், 2020ம் ஆண்டு உலகின் உண்மையான நாயகனாக வலம் வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாராட்டியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்